Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரும்பூஞ்சை தொற்று? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் எத்தனை பேருக்கு கரும்பூஞ்சை தொற்று? – சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
, வியாழன், 20 மே 2021 (13:17 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பையடுத்து கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 7 பேர் சர்க்கரை வியாதி உள்ளவர்கள். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 9 பேரும் நலமுடன் இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை: திமுக ஆட்சிக்கு ஜக்கி வாசுதேவ் பாராட்டு