Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளாடும் போதையில் வகுப்புக்கு வந்த தலைமை ஆசிரியர்...

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (15:40 IST)
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் நீர்த்தெம்பை.  இங்கு மலைவாழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இங்குள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் பலநூறு மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருப்பவர் மனோகரன்.
தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியரான மனோகரன் மது அருந்திவிட்டு வகுப்புக்கு எதிரிலேயே போதையில் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருக்கிறார்.
வகுப்பில் உள்ள மேஜையில் மது பாட்டில்,. தீனி, சாதம் குழம்பு, போன்றவை இருக்கின்றன. மாணவர்களுக்கு படிப்பு சொல்லித்தரும் ஆசிரியரே இவ்விதம்  இருந்தால் மானவர்களின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்விதான் இப்போது அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments