Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு குடும்பத்தையே கொடூரமாக தாக்கிய போஸிஸ் - மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஒரு குடும்பத்தையே கொடூரமாக தாக்கிய போஸிஸ் - மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (19:28 IST)
ஒரே குடும்பத்தையே காவல்துறை தாக்கிய வீடியோ வெளியானதை ஒட்டி தொடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 

 
திருவண்ணாமலை செங்கம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் என அனைவரையும் கடைத்தெருவில் வைத்து மிருகத்தனமாக தாக்கிய வீடியோ செய்திகளில் வெளியானது.
 
இவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கிய காவலர்கள் மீது பொதுநல வழக்கு ஒன்றினை வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
 
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், பொதுநல வழக்கு என்ற பெயரில் தினமும் காலையில் முறையிட்டு நீதிமன்றத்தின் நேரத்தை வழக்கறிஞர்கள் வீணடிக்க வேண்டாம்.
 
ஊடகங்களில் பிரபலம் அடைவதற்காகவே பல பொது நல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றனர். முகாந்திரம் இருந்தால் நீதிமன்றத்தின் அனுமதியில்லாமலே வழக்கு தொடரலாம் என்று கூறி பொதுநல மனுவினை தள்ளுபடி செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் உறவில் இது இருந்தால் நல்லது : சன்னிலியோன் ஓபன் டாக்