Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன் மீது குண்டர் சட்டம்?: எச்.ராஜா பரபரப்பு பேட்டி!

திருமாவளவன் மீது குண்டர் சட்டம்?: எச்.ராஜா பரபரப்பு பேட்டி!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (15:19 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா புதுவையில் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதமாற்ற கும்பல்களுடன் சேர்ந்து செயல்படுகிறார் எனவும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
 
புதுவையில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, சாதி மோதல்கள் வந்தால்தான் மதம்மாற்றம் செய்ய முடியும் என்பதற்காக திருமாவளவன் மதமாற்றும் கும்பலோடு இணைந்து கொண்டு செயல்படுகின்றார்.
 
திருமாவளவன் பேசியதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. அவரால் சிவன் உள்ளிட்ட அனைத்து கோவில்களுக்கும் பாதிப்பு உள்ளது. அவர் வெளியில் இருப்பது ஆபத்தானது. எனவே அவரை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments