பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு; ஹெச்.ராஜா வேண்டுகோள்

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:11 IST)
ஐபிஎல் போட்டிக்கு எதிராக வன்முறையை தூண்டி பேசிய பாரதிராஜா, அமீர், கௌதமன் உள்ளிட்டோர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும் என்று ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, சீமான், அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். 

 
சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ஐபிஎல் போட்டிக்கு எதிராக வன்முறையை தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திரு.முருகன் காந்தி, திருமாவளவன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

சிந்து மீண்டும் இந்தியாவுடன் இணைய வாய்ப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பரபரப்பு கருத்து

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ முன் ஆஜரான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா.. !

அடுத்த கட்டுரையில்
Show comments