Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு; ஹெச்.ராஜா வேண்டுகோள்

பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு; ஹெச்.ராஜா வேண்டுகோள்
, வியாழன், 12 ஏப்ரல் 2018 (16:11 IST)
ஐபிஎல் போட்டிக்கு எதிராக வன்முறையை தூண்டி பேசிய பாரதிராஜா, அமீர், கௌதமன் உள்ளிட்டோர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும் என்று ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் போராடி வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
 
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக அண்ணா சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பாரதிராஜா, வைரமுத்து, சீமான், திரு.முருகன் காந்தி, சீமான், அமீர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். 
webdunia

 
சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ஐபிஎல் போட்டிக்கு எதிராக வன்முறையை தூண்டி பேசியவர் சீமான் மட்டுமல்ல. வைரமுத்து, பாரதிராஜா, கௌதமன், அமீர், திரு.முருகன் காந்தி, திருமாவளவன் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஐபிஎல் போராட்டம்: தெறிக்க விட்ட தமிழர்கள்