Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதாரத்தை சீர்குலைத்த குற்றவாளி ப சிதம்பரம் தான்..ஹெச்.ராஜா ஆவேசம்

Arun Prasath
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (12:40 IST)
பொருளாதாரத்தை சீர்குலைத்த முதல் குற்றவாளி ப சிதம்பரம் தான் என ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார மந்தநிலை குறித்து பாஜகவையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, ஊழலில் ஈடுபட்ட ப சிதம்பரத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசியிருப்பது வேதனையளிக்கிறது, மேலும் நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப சிதம்பரம் தான் என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இத்தனை வருடங்கள், வங்கி பணத்தை சூறையாடியது காங்கிரஸ் கட்சிதான் எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் மீது ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு ஆகிய வழக்குகள் பதியப்பட்டன. இதில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிபிஐ அதிகாரிகளால் சிறை வைக்கப்பட்டு, பின்பு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ப சிதம்பரம் தாக்கல் செயத ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments