Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீட் விலக்கு ரத்தானதில் எச்.ராஜாவுக்கு அம்புட்டு சந்தோஷம்!

நீட் விலக்கு ரத்தானதில் எச்.ராஜாவுக்கு அம்புட்டு சந்தோஷம்!

நீட் விலக்கு ரத்தானதில் எச்.ராஜாவுக்கு அம்புட்டு சந்தோஷம்!
, செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (17:23 IST)
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க இன்று மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து தனது வாழ்த்துக்களை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


 
 
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்பித்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளிக்க தயாராக இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவசர சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கு கடந்த 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் நலன்களை பாதுகாப்பு வகையில் முடிவு எடுகப்பட வேண்டும் என் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்படும்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

 
இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீட் தேர்வின் அடிப்படையில்தான் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த மாதம் 4-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்களின் கனவு ஒரேயடியாக கலைந்தது.
 
இந்நிலையில் இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மருத்துவப்படிப்புக்கான சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் மட்டும் தான் நடத்த முடியும். தர்மம் வென்றுவிட்டது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெங்களூர் ஆர்என்ஜி சாலையில் சசிகலாவை பார்த்து அதிர்ந்துவிட்டேன்: ரூபா பகீர் பேட்டி!