Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் இப்போது சிபிஎஸ்இ முதலாளிகள்.. திமுகவை தாக்கும் ஹெச்.ராஜா

Arun Prasath
திங்கள், 6 ஜனவரி 2020 (17:33 IST)
அன்று ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களெல்லாம் தற்போது சிபிஎஸ்இ பள்ளி முதலாளிகள் என ஹெச்.ராஜா திமுகவை விமர்சித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றபோது உள்ளே நுழைந்த மர்ம கும்பல் இரும்பு கம்பிகளால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த பல மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஜே.என்.யூவில் இடது சாரிகள் நடத்திய முகமூடி நாடகத்தை தமிழக மாணவர்கள் நம்பி யாரும் தங்கள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ”திக மற்றும் திமுக ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை நடத்தியபோது மாணவனாக பார்த்தவன் நான். இன்று அவர்கள் சிபிஎஸ்இ பள்ளி முதலாளிகள்” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments