Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்துவை தூங்க விடக்கூடாது: திடீரென கூவும் ஹெச்.ராஜா

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:09 IST)
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
 
சமீபத்தில் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது குற்றச்சாட்டிற்கு பதிலளித்த வைரமுத்து அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மையைக் காலம் சொல்லும் என கூறியிருந்தார். ஆனால் சின்மயி விடாமல் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார்.
 
இதனையடுத்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்ட வைரமுத்து, என் மீது புகார் கூறுபவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். நீதிமன்றம் சொல்லட்டும் நான் எப்படிபட்டவன் என்று அதிரடியாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் அவதூறு வழக்கில் சிக்கி இதுநாள் வரை எதையும் பேசாமல் மௌனமாக இருந்த ஹெச்.ராஜா நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டு தன் வேலையை மீண்டும் துவங்கிவிட்டார்.
 
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எச்.ராஜா, வைரமுத்து மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், என் தாய் ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து நிம்மதியாக தூங்க முடியாது எனவும் காட்டமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்