Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரைவர்கள் செய்த வேலையால் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (15:02 IST)
தேனி மாவட்டத்தில் உள்ள  கம்பம் பகுதியில் இரண்டு தனியார் பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றர். 
 
கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் கிராமப்புறங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் ஆனால் அந்த பள்ளிகளில் போதிய வாகன வசதி இல்லை என கூறப்படுகிறது. மேலும் சிறிய வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். 
 
இந்நிலையில்,  இன்று காலை கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி வந்த இரண்டு தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள்  ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு முந்த முயற்சித்ததால் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகிய பேருந்து வளைவில் குப்புற கவிழ்ந்து விழுந்துள்ளன. இதனால் பேருந்தில் இருந்த பல மாணவர்கள் படுகாயம் அடைந்து ரத்த காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

சிலிண்டர் விலை குறைவு என அறிவிப்பு.. ஆனாலும் தாய்மார்கள் அதிருப்தி..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments