Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேள்வி கேட்கும் துணிவு இருக்கா உமக்கு? கமலை சீண்டும் எச்.ராஜா

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (12:32 IST)
கேரளாவில் உள்ள சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை அமல்படுத்த கேரள அரசு முயற்சித்து வருவதை எதிர்த்து பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதில் பாஜகவும் ஒன்று. 
 
குறிப்பாக முதல் அமைச்சர் பினராயி விஜயன் இந்துக்களை மதிக்கவில்லை என விமர்சித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை குறைகூற கூடாது என தனது கருத்தை தெரிவித்திருந்தார். 
 
இதர்கு பதிலடி தரும் விதமாக எச்.ராஜ டிவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், சபரிமலையை பொறுத்தவரை கேரள அரசை குறை சொல்ல கூடாதாம். உச்சநீதி மன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமாம். கமல்ஹாசன் கூறுகிறார். 
அப்படியானால் 2017 ஆம் ஆண்டு பிரவம் சர்ச் குறித்த தீர்ப்பை பினராயி விஜயன் அரசு ஏன் செயல்படுத்தவில்லை என கேட்கும் துணிவு உண்டா கமலுக்கு? மொத்தத்தில் மக்கள் நீதி மய்யம் இந்து விரோத அமைப்பே என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments