Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிமணியால் மானமிழக்கும் திமுக, திருமா, காங்,... சோலோவாய் வச்சு செய்யும் எச்.ராஜா!!

ஜோதிமணியால் மானமிழக்கும் திமுக, திருமா, காங்,... சோலோவாய் வச்சு செய்யும் எச்.ராஜா!!
, புதன், 20 மே 2020 (12:47 IST)
ஜோதிமணி குறித்து கரு.நாகராஜன் பேசியதை எதிர்ப்பவர்களை பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கடுமையாக விமர்சித்து வருகிறார்.
 
கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசியதாகவும் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை அவமதித்ததாகும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கரு.நாகராஜனுக்கு ஆதரவாகவும் பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முக்கியமாக ஆதரவு அளிப்பவர் எச்.ராஜா. 
 
இந்த விவகாரத்தில் எச்.ராஜா ஜோதிமணிக்கு ஆதரவு குரல் கொடுக்கும் திமுக, விசிக, காங்கிரஸ் என அனைவரையும் விமர்சித்து வருகிறார். இதன் தொகுப்பு பின்வருமாறு... 
 
காங்கிரஸுக்கு எதிராக:
இத்தாலிச் சோனியா இந்தியர் மோடியை இழிவாகப் பேசியதை கண்டிக்காத காங்கிரஸ் கட்சி, கரு.நாகராஜனை கண்டிப்பதை ஏற்க முடியாது. 
 
திருமாவளவனுக்கு எதிராக: 
காயதிரி ரகுராமனை விமர்சித்ததை குறிப்பிட்டு, என்ன திருமாவளவன் அவர்களே உங்களை போல பாஜக காரர்கள் நாகரீகமாக பேசலை என்கிறீர்களா?  பிற சமுதாய ஆண்களுக்கு ஆண்மை இல்லை அதனால் உங்கள் பெண்கள் எங்கள் 3 ஜாதி பேரச் சொல்லி  இடம் வந்து படுக்கிறார்கள. 10 மாதம்..., என்று ரொம்ப நாகரீகமாக நீங்க பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அந்த மாதிரி எந்த பாஜகவினரும் பெண்களை பேச மாட்டார்கள். முதலில் தயாநிதி மாறனை கண்டியுங்கள். 
 
திமுகவுக்கு எதிராக: 
கருணாநிதி, இந்திரா காந்திக்கு கல்லடி பட்டு ரத்த வழிந்த போது அதனை மாதவிடாய் என கூறியதை குறிப்பிட்டு, திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் பெண் என்பதால் எவ்வளவு மரியாதையோடு திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி பேசியுள்ளார். இந்த மாதிரி கரு.நாகராஜன் அவர்களுக்கு பேசத் தெரியவில்லையே.
 
பாஜகவினருக்கு... 
கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில்  மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும் அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர்களுக்கு தேர்வு உண்டு!? – அறிவிப்பு வெளியிட்ட பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!