Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மொத்தமாக டாட்டா காட்டிய குலாம் நபி ஆசாத்! - அதிர்ச்சியில் காங்கிரஸ்!

மொத்தமாக டாட்டா காட்டிய குலாம் நபி ஆசாத்! - அதிர்ச்சியில் காங்கிரஸ்!
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (11:44 IST)
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கட்சியிலிரிந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் தேசிய கட்சியான காங்கிரஸ் பலமான பின்னடைவை சந்தித்த நிலையில் மீண்டும் கட்சியை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸை நிலைப்படுத்த சமீபத்தில் நடந்த கூட்டத்தில் ஜம்மு மாநில காங்கிரஸிற்கு பல்வேறு பதவிகளில் பலரும் நியமிக்கப்பட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் அந்த பதவி வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாக அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து கட்சி செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்த குலாம் நபி ஆசாத் தற்போது காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் இந்த முடிவை எடுத்துள்ளது காங்கிரஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 2030-க்குள் 6ஜி சேவை !!!