Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியைக்கு கத்திக்குத்து

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (12:04 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியியல் துறையின் தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியை ஜெனிபா கத்தியால் குத்தி தாக்கப்பட்டுள்ளார்.


 

 
மதுரை பல்கலைக்கழகத்தில் இதழியியல் துறையின் தலைவராக பேராசிரியை ஜெனிபா பணியாற்றி வருகிறார். கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய ஜோதி முருகன் மீது ஜெனிபா நடவடிக்கை எடுத்ததால் அவர் ஆத்திரத்தில் ஜெனிபாவை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளே நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த ஜெனிபா, ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கத்தியால் குத்திய தற்காலிக பணியாளரான ஜோதி முருகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேராசிரியர் பலகலைக்கழக வளாகத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments