Publish Date: Mon, 20 Aug 2018 (18:20 IST)
Updated Date: Mon, 20 Aug 2018 (18:23 IST)
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு வழங்கிட கோரி அரசு மருத்துவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப் படிகளை வழங்கிட கோரியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கண்டித்து கரூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருபால் மருத்துவர்களும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பேட்டி – நந்தகுமார் – அரசு மருத்துவர் கரூர்
சி.ஆனந்தகுமார்