Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று நாளையும் பயண சேவை - 3000 பேருந்துகள் வரை இயக்க திட்டம்

இன்று நாளையும் பயண சேவை - 3000 பேருந்துகள் வரை இயக்க திட்டம்
, சனி, 22 மே 2021 (15:54 IST)
இன்றும் நாளை வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பயணிக்க அரசு, தனியார் பேருந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவக் குழு பரிந்துரைத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். எனவே இன்றும் நாளையும் தளர்வுகள் வழங்க்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக இன்றும் நாளை வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பயணிக்க அரசு, தனியார் பேருந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
எனவே, சென்னையில் இருந்து இன்றும், நாளையும் அரசு சார்பில் 1500 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்கள் இடையே 3000 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Swiggy,zomoto -நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடுபட அனுமதி