Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு

Siva
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (10:54 IST)
இன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக கலந்து கொள்ளாது என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்வார் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து வைக்கும் வழக்கம் இருக்கும் நிலையில் இந்த ஆண்டும் தேநீர் விருந்து வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக திமுக கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் நேற்று திமுக இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று அரசு சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் அரசியல் நிலைப்பாடு வேறு, இது வேறு என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments