Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு பகுதியில் மீண்டும் கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (10:44 IST)
வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பெரும் உயிரிழப்பு நிகழ்ந்த நிலையில் தற்போது மீண்டும் அதே பகுதியில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் அதிக கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. ஏற்கனவே கேரளாவில் உள்ள எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று குறிப்பாக வயநாட்டில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள மாநில அரசு எடுத்து மீண்டும் ஒரு பேரிழப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments