Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திராவிடம் ஒரு இனமே இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு!

dravidam
, புதன், 16 நவம்பர் 2022 (18:32 IST)
திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  கடந்த சில மாதங்களாக சனாதனம் குறித்தும் திருக்குறள் குறித்தும் பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று பழங்குடியின தலைவர்  பிர்சா முண்டா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பேசினார் .அப்போது திராவிடம் இனம் என  ஒரு இனமே இல்லை என்றும், ஆங்கிலேயர்கள் கூறியது தவறு என்றும் திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
வட பகுதியில் இருப்பவர்கள் தெற்கு பதிகுக்கு வருவதும் தெற்கில் இருப்பவர்கள் வட பகுதிகளுக்கு செல்வதும் நீண்டகாலமாக இருந்து வருகிறது என்றும் அதே போல் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்
 
அவரது இந்தப் பேச்சு குறித்து திராவிட தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு உணவு: ஐஆர்சிடிசி தகவல்