Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்ட தடை; ஒப்புதல் அளித்த கவர்னர்!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (09:47 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் பலர் பணத்தை இழப்பதுடன் தற்கொலையும் செய்து கொள்வதால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.

இதுகுறித்து சிறப்பு விசாரணை குழுவை அமைத்த தமிழக அரசு அதன் அறிக்கையை கொண்டு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை அமல்படுத்தியது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ALSO READ: முதல்வருக்கு முதுகு வலி! பசும்பொன் பயணம் ரத்து!

விரைவில் இந்த சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், சூதாட்ட நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments