Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூரப்பா மீதான விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சூரப்பா மீதான விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
, புதன், 9 ஜூன் 2021 (13:06 IST)
முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக கடந்த ஆட்சியில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது 
 
இந்த விசாரணைக் குழுவின் காலம் முடிவடைந்ததை அடுத்து விசாரணை தொடருமா என்ற எண்ணம் ஏற்பட்டது.இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
 
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த விசாரணை குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அடுத்து சூரப்பா மீதான விசாரணை தொடரும் என்பது குறிப்பிடதக்கது. சூரப்பா தற்போது ஓய்வு பெற்று விட்டதால் அவர் தனது சொந்த மாநிலத்திற்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலில் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், அப்புறம் மத்திய அரசை குறை கூறலாம்: எல்.முருகன்