Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாதையன் இறப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

ramadoss
, புதன், 25 மே 2022 (15:27 IST)
மாதையன் இறப்புக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
35 ஆண்டுகளாக சிறையில் வாடிய  வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன்,  அவரது உடல் நல பாதிப்புக்கு  சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.
 
மாதையன் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. அவர் பொய்வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டார். அப்போதைய சூழலும், பொதுப்புத்தியும் அவருக்கு தண்டனை பெற்றுத் தந்தன. ஆனாலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதையனை 35 ஆண்டுகளாக சிறையில் அடைத்து வைத்தது மனித உரிமை மீறல்!
 
மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்... அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனிதநேயமற்ற அரசு எந்திரம் தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்!
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்றுதான் சொன்னேன், இன்று மீண்டும் ஒரு கொலை: எடப்பாடி பழனிசாமி