Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் பேருந்தின் பின் சக்கரங்கள் கழண்டு விழுந்ததால் பரபரப்பு.. ‘கரகாட்டக்காரன்’ காமெடி போல் நிஜ சம்பவம்..!

Advertiesment
தென்காசி

Mahendran

, வெள்ளி, 20 ஜூன் 2025 (12:48 IST)
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கவுண்டமணியின் காரில் சக்கரங்கள் கழன்று ஓடும் காமெடி காட்சி போல், தென்காசியில் அரசு பேருந்து ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென பின் சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று ஓடியதால் பயணிகள் கடும் அச்சமடைந்தனர்.
 
தென்காசி மாவட்டம், இடைக்கால் பகுதியில் அரப் பேருந்து ஒன்று 87 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாப் பேருந்தின் பின் சக்கரங்கள் இரண்டும் தனித்தனியாக கழன்று ஓடின. இதனால் பேருந்தில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும், மற்றவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததாலும், பின் சக்கரங்கள் கழன்று விழுந்தவுடன் பேருந்து தரையில் அப்படியே இறங்கிவிட்டதாலும், அப்போது பேருந்துக்கு முன்பும், பின்பும் வாகனங்கள் வராத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  பின்னர், பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு சரி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போரை நிறுத்த சொல்லி இந்தியாவிடம் கெஞ்சினோம்!? - உண்மையை கக்கிய பாகிஸ்தான் துணை பிரதமர்!