Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை இன்று முதல் தொடக்கம்

bus
, புதன், 3 ஆகஸ்ட் 2022 (11:46 IST)
அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் விரைவில் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்த நிலையில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல்கட்டமாக மதுரை, திருச்சி , கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து அரசு பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை தொடங்கப்படுகிறது என தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த அரசு பேருந்துகளில் பொதுமக்கள் தினசரி மற்றும் மாத வாடகை மூலம் பார்சல் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்காகவே நியாயமான கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்களின் லாரிகளில் தான் பார்சல்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இனி, அரசு பேருந்துகளில் குறைந்த கட்டணத்தில் அனுப்பிக் கொள்ளலாம் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு: முன்னாள் அமைச்சர் ஆ.ராசா புகார்