Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1.7 கிலோ அளவுக்கு தங்கக்காசுகள் - திருச்சி கோவிலில் புதையல் !

1.7 கிலோ அளவுக்கு தங்கக்காசுகள் - திருச்சி கோவிலில் புதையல் !
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (08:48 IST)
திருவானைக்காவல் கோவில்

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக் கோவில் ஜம்புகேஸ்வரர் கோவிலில் ஒரு கிலோ அளவுக்கு தங்கக்காசுகள் கிடைத்துள்ளன.

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில் வளாகத்தில் நந்தவனம் வைப்பதற்காக நிலத்தை தோண்டியபோது அங்கு ஒரு அடி ஆழத்தில் தங்கப் புதையல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த புதையலில் மொத்தம் மொத்தம் 505 காசுகள் கிடைத்துள்ளன. அதில் ஒரு 10 கிராம் காசைத் தவிர மற்றவை எல்லாம் 3 முதல் 3.5 கிராம் எடை உள்ளவை என தெரிகிறது. இந்தக் காசுகளின் மொத்த எடை ஒரு கிலோ 716 கிராம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அந்த காசுகள் அனைத்தும் வருவாய் துறையிடம் அளிக்கப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. விரைவில் அந்த காசுகள் எந்த காலத்தைச் சேர்ந்தவை என்பதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஏஏ போராட்டம்: ஆம் ஆத்மி கவுன்சிலர் கைதால் பரபரப்பு