Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்: இன்றும் உயர்ந்தது!!

அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்: இன்றும் உயர்ந்தது!!
, சனி, 2 அக்டோபர் 2021 (10:21 IST)
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, சவரன் ரூ.35,096க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,387க்கும், சவரன் ரூ.35,096க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கு விற்பனையாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமாவுக்கு திதி கொடுப்பதில் வாக்குவாதம்… அத்தையைக் குத்தி கொன்ற இளைஞர்!