Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசையாக அப்பா வாங்கி தந்த செல்போன்… உடைந்ததால் மாணவி தற்கொலை!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:23 IST)
கோவை மாவட்டம் அன்னூரில் ஆன்லைன் வகுப்புகளுக்காக தந்தை வாங்கித் தந்த செல்போன் உடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குப்பனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி வேலை பார்க்கும் இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்புகளுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து புதிதாக ஒரு செல்போன் வாங்கி தந்துள்ளார்.

ஆனால் மாணவி தாரணி அந்த செல்போனைக் கைதவறி கீழே போட்டு உடைத்துள்ளார். இது அப்பாவுக்கு தெரிந்தால் மிகவும் கோபப்படுவார் என நினைத்து தாரணி நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் உடல் கிணற்றில் மிதந்ததை அடுத்து இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இது சம்மந்தமாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரையுலகில் 50 ஆண்டுகள்.. ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

மோடி தொகுதி வாரணாசியிலும் வாக்காளர் மோசடியா? ஒரே தந்தைக்கு 50 மகன்கள்?

இன்னொரு அதிமுக விக்கெட் காலி.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி..!

வியட்நாம் விவசாயிகளை விரட்டியடித்த ட்ரம்ப்! கோல்ஃப் க்ரவுண்ட் கட்ட திட்டம்!

மீண்டும் ஓட்டுனர் உரிமை வழங்க டிடிவி வாசன் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments