Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி ஆணையம் - இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியீடு

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (12:48 IST)
காவிரி ஆணையம் இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியீடப்படும் என மத்திய நீர் வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. அனால், மத்திய அமைச்சரவை காவிரி ஆணையத்தை தற்பொழுது வரை,  அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய நீர் வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments