Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி ஆணையம் - மீண்டும் நீதிமன்றத்தை நாடவிருக்கும் தமிழக அரசு

காவிரி ஆணையம் - மீண்டும் நீதிமன்றத்தை நாடவிருக்கும் தமிழக அரசு
, வெள்ளி, 1 ஜூன் 2018 (11:01 IST)
காவிரி ஆணையம் அமைக்க அரசாணை வெளியிடாத மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளது தமிழக அரசு.
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
webdunia
தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. அனால், காவிரி செயல்திட்டத்துக்கு தற்பொழுது வரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பக்கம் சாயும் கருணாஸ் - விரைவில் கைது?