Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (12:27 IST)
இமாச்சரப்பிரதேசத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேச மாநிலம் தியோங் பகுதியில் அரசுப்பேருந்து ஒன்று 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைபகுதியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 26 நபர்களை மீட்ட மீட்புத்துறையினர், அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments