Publish Date: Fri, 01 Jun 2018 (12:48 IST)
Updated Date: Fri, 01 Jun 2018 (12:55 IST)
காவிரி ஆணையம் இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியீடப்படும் என மத்திய நீர் வளத்துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த காவிரி திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை மே 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த செயல்திட்டம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தென்மேற்கு பருவமழை துவங்கிவிட்டது. அனால், மத்திய அமைச்சரவை காவிரி ஆணையத்தை தற்பொழுது வரை, அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தில் மத்திய அரசின் மீது அவமதிப்பு வழக்கு தொடர திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய நீர் வளத் துறை செயலாளர் உபேந்திர பிரசாத் சிங், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று அரசிதழில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.