வைகோ பேசுவது வேடிக்கையான நகைச்சுவை: காயத்ரி ரகுராம் டுவீட்

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (20:15 IST)
இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்வதாக வைகோ இன்று ஆவேசமாக தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளதை அடுத்து வைகோவிற்கு பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது. அவர் கூறியிருப்பதாவது:
 
ஒன்னரை இலட்சம் ஈழத்தழிழர்களை கொன்று குவித்தது சோனியாவின் காங்கிரஸ் தான்,ராஜபக்சேவுடன் கைகோர்த்து கொண்டு ஈழ தமிழர்களின் ரத்தத்தை குடித்தது காங்கிரஸ் ,, அதற்கு  திமுகவும் துணை போனது  என இது நாள் வரை  பேசிவிட்டு, தற்போது உங்கள் சுய நலத்திற்காக ஒன்னரை இலட்சம்  ஈழ தமிழர்களை  கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும்  திமுக வோடு கூட்டணி சேர்ந்து கொண்டு,  மோடி ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்  என வைகோ பேசுவது வேடிக்கையான நகைச்சுவை..
 
உங்களை போன்ற   ஈழ   துரோகிகளை உலக தமிழர்கள் அடையாளம் கண்டு விட்டார்கள், சுய நலத்திற்காக  மாற்றி மாற்றி பேசும் உங்களை ஈழ தமிழர்களின் ஆன்மா கூட மன்னிக்காது, மோடி ஈழ தமிழர்களை காப்பாற்றுவார்.விடியல் தருவார் ஈழ பிரச்சனை எங்களுக்கு வியாபாரம்   அல்ல உணர்வு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments