Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவின் உடலையே சுற்றி வந்த கருடன்: தொண்டர்கள் உருக்கம்!

ஜெயலலிதாவின் உடலையே சுற்றி வந்த கருடன்: தொண்டர்கள் உருக்கம்!

ஜெயலலிதாவின் உடலையே சுற்றி வந்த கருடன்: தொண்டர்கள் உருக்கம்!
, புதன், 7 டிசம்பர் 2016 (12:23 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று ராஜாஜி மஹாலில் பொதுமக்களின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது. அப்போது பெருமாளின் வாகனமான கருடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மூன்று முறை சுற்றி வந்தது.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இவரது உடல் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலிக்கு காலை ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்ட போது பெருமாளின் வாகனமான கருடன் மூன்று முறை ராஜாஜி மஹாலை வலம் வந்தது. இதனையடுத்து பெருமாளின் ஆசிர்வாதம் ஜெயலலிதாவிற்கு கிடைத்ததாக தொண்டர்கள் உருக்கமாக கூறினர்.
 
எண் கணக்குப்படி 5-ஆம் எண் நவக்கிரகங்களில் புதனுக்கு உரியதாகும். இந்த புதனின் அதிபதி பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இறந்ததும் 5-ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. உடல் அருகே சிரிப்புடன் செல்பி எடுத்தாரா கருணாஸ்?