Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ. உடல் அருகே சிரிப்புடன் செல்பி எடுத்தாரா கருணாஸ்?

ஜெ. உடல் அருகே சிரிப்புடன் செல்பி எடுத்தாரா கருணாஸ்?
, புதன், 7 டிசம்பர் 2016 (12:05 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலலிதாவின் உடல் அருகே நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் சிரித்தபடி ஒருவரின் செல்பிக்கு போஸ் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி  கடந்த 6ம் தேதி இரவு காலமானார். 
 
இந்நிலையில், முதல்வரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் அருகில் ஒருவரின் செல்பிக்கு அவர் போஸ் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
மேலும், அவருக்கு  சீட் கொடுத்து, இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்து எம்.எல்.ஏ-வாக மாற்றி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் இப்படி புன்சிரிப்புடன் போஸ் கொடுப்பது சரியா?.. இதுதான் கருணாஸ் காட்டிய நன்றி” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த புகைப்படத்தை கண்டவர்கள் பலரும் கருணாஸிற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா மறைந்த அதிர்ச்சியை தாளாமல் 60க்கும் மேற்பட்டோர் மரணம்