Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழருவிமணியன் தலைமையில் காந்தியமக்கள் இயக்கத்தினர் திடீர் ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (19:46 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் தமிழருவிமணியன் என்பது தெரிந்ததே
 
மேலும் தனது இயக்கமான காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி ஆரம்பிக்கும் கட்சியுடன் இணைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்பதை உறுதிபடக் கூறிவிட நிலையில் இன்று கோவையில் தமிழருவி மணியன் தலைமையில் காந்திய மக்கள் இயக்கத்தின் ஆலோசனை நடைபெற்றது
 
கோவை கவுண்டம்பாளையம் என்ற பகுதியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தமிழருவி மணியன் தலைமையில் அதன் நிர்வாகிகள் முக்கிய முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்று ரஜினி மக்கள் மன்றத்தில் காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இரு அமைப்புகளும் ஒன்று சேரும் என்று கூறப்படுகிறது
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு திரும்ப வேண்டும் என இன்று அவர் ரசிகர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி மக்கள் மன்றத்துடன் இணைக்க தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments