Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் முழுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் விளக்கம்!

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (08:37 IST)
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முழு முடக்கம் அமலுக்கு வர போவதாக வெளியான தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் “சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தியே. அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments