Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று கொரோனா புதிய உச்சம்: 1600ஐ தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் இன்று கொரோனா புதிய உச்சம்: 1600ஐ தாண்டியதால் பரபரப்பு
, செவ்வாய், 9 ஜூன் 2020 (18:49 IST)
தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1685 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் 1600க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் புதிய உச்சபட்சமாக பார்க்கப்படுகிறது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1685 பேர்களில் 1243 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,545ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 21 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 307ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 798பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதால் கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் குணமாகியவர்களின் எண்ணிக்கை 18325 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று 13219 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்பதும், தமிழகத்தில் இதுவரை மொத்தம் 621,171 பேர்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென பின்வாங்கிய சீன ராணுவம்: லடாக்கில் பரபரப்பு