திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (08:35 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். இதனால் திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஜூன் 2ஆம் தேதி சென்னை கொரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளிவந்தது
 
இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின், மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடன் ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார் என மருத்துவமனை அறிவித்துள்ளது. இதனால் திமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
 
62 வயதான ஜெ.அன்பழகனின் உடல் தொற்றுநோய் விதிகளின் படி சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments