Publish Date: Wed, 05 Jan 2022 (15:00 IST)
Updated Date: Wed, 05 Jan 2022 (15:04 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதனால் சில உடனடி கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து பேட்டியளித்துள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதால், சனிக்கிழமைகளில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். பள்ளி, கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் அறிவிப்பார்” என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் தடை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.