Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை முழுமுடக்கம் நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு

ஜூலை 6 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை முழுமுடக்கம் நீட்டிப்பு - முதல்வர் உத்தரவு
, சனி, 4 ஜூலை 2020 (16:11 IST)
மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மக்களை கொரொனா தாக்குதலில் இருந்து பாதுக்காக்க அரசு தீவிர முயற்சிகள் எடுத்து துரிதமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரொனா பாதிப்பு 6 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

வரும் ஜூலை 30 வரை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் முழு ஊரங்கு உள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அவர் உத்தவிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை விற்பனை இல்லை - பெட்ரொல் விற்பனையாளர் சங்கம்