Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை: ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (07:31 IST)
இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை
கொரோனா வைரஸ் காரணமாக ஜூலை 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் சென்னையில் ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜூலை 6 முதல் அதாவது இன்று முதல் ஒருசில தளர்வுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதால் சென்னை இன்று முதல் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்புகிறது
 
ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னையில் உணவகங்கள் காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை இயங்கலாம் என்றும் ஆனால் பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆன்லைன் உணவு நிறுவனங்கள். காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மட்டும்‌ உணவுகளை வழங்கும் சேவை செய்யலாம்.
 
தேநீர்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் என்பதும் பார்சல் மட்டுமே அனுமதி என்பதும் குறிப்பிடத்தக்கது‌ மேலும். காய்கறி கடைகள்‌ மற்றும்‌ மளிகைக்கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்‌.
 
மால்கள் தவிர மற்ற வணிக வளாகங்கள்‌, ஜவுளி, நகைக்கடைகள், ஷோரூம்கள்‌ ஆகியவை காலை 10.00 மணி முதல்‌ மாலை 6.00 மணி வரை செயல்படலாம்‌. இதுபோன்ற தளர்வுகளால் இன்று முதல் சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments