Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Advertiesment
rain
, ஞாயிறு, 27 நவம்பர் 2022 (17:32 IST)
இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்,
 
அந்த வகையில் இன்று முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனிமொழி எம்.பி., வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: என்ன காரணம்?