Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மது அருந்த பணம் தராத நண்பனின் ஆணுறுப்பை கட் செய்த நபர்

மது அருந்த பணம் தராத நண்பனின் ஆணுறுப்பை கட் செய்த நபர்
, செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (13:17 IST)
மது அருந்த பணம் தராத நண்பனின் ஆணுறுப்பை  மற்றொரு நபர் கட் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கொளத்தூர் மகாத்மா காந்தி நகரில் வசிப்பர் மூர்த்தி(49). இவரும், அதே பகுதியை சேர்ந்த சரவணனனும்(40) நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும் தெருவில் இருக்கும் குப்பைகளை பொறுக்கி அதன் மூலம் பணம் ஈட்டு வந்தனர். இவர்கள் இரவில் சாலையோர நடைபாதையில் படுத்து உறங்கி வந்தனர்.
 
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மேலும் மது அருந்த மூர்த்தியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், மூர்த்தி மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.
 
அப்போது, சரவணன் தனது பாக்கெட்டில் வைத்திருந்த பிளேடை எடுத்து, மூர்த்தியின் மர்ம உறுப்பை துண்டித்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். மூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தன்ர்.
 
அங்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் இருந்த மூர்த்தியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சரவணனை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் ஆரவாரம்