Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வரிகளை ஏற்றி அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த துருக்கி

வரிகளை ஏற்றி அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த துருக்கி
, வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:49 IST)
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கி அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது. 
அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர், துருக்கியில் உளவு வேலை பார்த்ததாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தது துருக்கி அரசு. ஆண்ட்ரூவை நாடு கடத்தக் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்தது துருக்கி அரசு.
 
எனவே துருக்கி அரசிற்கு பதிலடி கொடுக்க, அமெரிக்க அரசு, துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற உருக்கு மற்றும் அலுமினியம் மீது 2 மடங்கு வரி விதித்தது. இதனால் துருக்கியின் நாணய மதிப்பு சரிந்தது
webdunia
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துருக்கி அரசு, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளக்காடாக மாறி வரும் கேரள நாடு - பலியானோர் எண்ணிக்கை 73 ஆக உயர்வு