குக்கர், பணம் விநியோகம்; ஈரோடு கிழக்கில் பரபரப்பு! – 2 வழக்குகள் பதிவு!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (09:59 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இலவசங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாதக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. அதேசமயம் தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு இலவசங்கள், வழங்குதல், பணம் வழங்குதல் போன்றவைகளும் நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்களர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டதாக வெளியான புகாரில் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி சிவக்குமார் கூறுகையில், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments