Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் தீ விபத்து!

Fire
, வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:42 IST)
பெங்களூரில் கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கார்கள் எரிந்து  நாசமடைந்தன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சர்வதேச விமான கண்காட்சி நடந்து வரும் நிலையில், பெங்களூரில் இன்று கார் பழுதுபார்க்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலையில் இந்தக் கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்தத் தீ விபத்து குறித்துக் கேள்விப்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: ஹரியானாவில் முக்கிய குற்றவாளி கைது..!