நகரங்கள் முழுவதும் இலவச வைஃபை.. முக்கிய நகரங்களில் நியோ டைடல் பார்க்! – இளைஞர்களை கவரும் தமிழக பட்ஜெட் 2024!

Prasanth Karthick
திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:56 IST)
தமிழக அரசு பட்ஜெட் 2024 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் இளைஞர்கள் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.



அதன்படி, தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் முதல் கட்டமாக 1000 இடங்களில் இலவச வைஃபை இணைய சேவை வழங்கப்பட உள்ளது. பின்னர் இது மேலும் பல நகரங்கள், கிராமங்களுக்கு நீடிக்கப்படும் என கூறப்படுகிறது.

தற்போது ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்காக சென்னை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் டைடல் பார்க் செயல்பட்டு வரும் நிலையில், அதுபோல சென்னை, சேலம், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் 13 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை.. இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

நவம்பர், டிசம்பரில் வலுவான புயல்கள் உருவாக வாய்ப்பு! - சுயாதீன வானிலை ஆய்வாலர் டெல்டா வெதர்மேன் கணிப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. நீதிமன்ற விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே குழந்தை பெற்றதால் அதிர்ச்சி..!

எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை.. டிஜிட்டல் அரேஸ்ட்டில் ரூ.50 லட்சம் ஏமாந்த முதிய தம்பதி..!

சூடானில் உள்நாட்டு போர் தீவிரம்.. ராணுவமே சொந்த நாட்டு மக்கள் 460 பேரை கொன்ற கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments