Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிவாரண பொருட்களை கட்டணமில்லாமல் அனுப்பலாம்! தமிழக அரசு அறிவிப்பு...!!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (12:09 IST)
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரண பொருட்களை அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


 
தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட  4 மாவட்டங்களில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் தனித் தீவுகளாகவே மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமலும், உணவு கிடைக்காமலும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரணப் பொருள்களை இலவசமாக அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு நிவாரண உதவி செய்ய விரும்புபவர்கள் போக்குவரத்து சிரமம் இல்லாமல் பொருட்களை அனுப்ப முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments