Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுபோட இலவசமாக கார்: உபேர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (19:52 IST)
தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பதும் காவல்துறை வாக்குப்பதிவு நாளன்று பாதுகாப்பாக தேர்தலை நடத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் வாக்குப்பதிவில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவுக்கு செல்வதற்கு இலவசமாக கார்களை தருவதற்கு உபேர் நிறுவனம் முன்வந்துள்ளது
 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்கள் தங்களுக்கு தகவல் தந்தால் வீட்டிலிருந்து வாக்குப்பதிவு மையத்திற்கு இலவசமாக கார் மூலம் அழைத்துச் செல்வோம் என்றும் அதே போல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அவர்களை வீட்டிற்கும் இலவசமாக அழைத்துச் செல்வோம் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments